உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

மார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும், தவன் என்றும் சொல்வதற்குரியவனாவான். மிருக ஜன்மங்களை நீக்கிவிட்டு உண்மை மனிதனாக வேண்டும் எனகிறார் பாரதியார்.

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பவனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது நசத்துப் பொது நம்பிக்கை. பாவம் செய்யும் ஒருவனை அடுத்த ஜன்மத்தில் மிருகமாகப் பிறப்பாய்' என்றால். அவனுடைய மனம் பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்தி லயே தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் விதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன், ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து றந்து மாய்கிறான் என்று கூறத்தகும். மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருங்கங்களாருந்திருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும், ஆத்திரத்தாலும் சமயத்திற்கேற்பப் பலவிதக் வேடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமல்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனஞ் சார்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப் பிரியமாக நடந்து