பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 குனயே?’ என்றும், 'மஹாத்மா நீ வாழ்க வாழ்க" என்றும் காந்தி அடிகளை வாயாரப் புகழ்கின்ருர் பாரதியார். அவருக்குக் காந்தி அடிகளின் அஹிம்ஸைக் கொள்கையால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என்று தமது மிக நுட்பமான உள்ளுணர்வு கூறுகின்றது. ஆகவேதான். மஹாத்மா நீ வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்ருர். ஆனல் க ரு த் து வேறுபடும்போது, பாரதியாருக்கு பாரிடமும் தயவு தாட்சண்யம் பார்ப்பது பழக்கம் இல்லை. அவருடைய கொள்கைக்கு மாறுபட்டால், அதை உடனே வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். இ ந் தி யா வி ல் விதவைகளின் பரிதாபகரமான நிலைமையைக் குறித்தும் இவ்வாறே சொல்வது கவனிக்கத்தக்கது. ஒரு வயதுடைய கைம்பெண்கள் ஆயிரத்துப் பதிலுை பேர்கள் இருக்கின் ருர்கள் என்று அறிந்தபோது அவருக்குச் சினத்தீ மூண் டெழுகின்றது. ரீமான் காந்தி சொல்லும் உபாயம் அவருக்கு முற்றிலும் பிடித்தமானதாக இருக்கவில்லை. அதனுல்தான் அவருக்குத் தைரியம் இல்லையென்றும், மழுப்புகிருர் என்றும் சொற்களைப் பிரயோகப் படுத்து கின்ருர். இக்கட்டுரையை வாசித்து அறிந்தவர்கள் இதன் உண்மையை உணர்வார்கள். பூரீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி) யால் நடத்தப்படும் நவஜீவன்' என்ற பத்திரிகை பில், ஒருவர் பாரததேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிரு.ர். அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. வயது மணம்புரிந்த மாதர் கைம்பெண்கள் 0-1 13212 1014 I-2 17753 856