பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. I3. 14. 15. I6. 17 அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடீ!-கிளியே! ஊமைச் சனங்களடி: ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும்-கிளியே! வாழத் தகுதி யுண்டோ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில்!-கிளியே! இருக்க நிலைமை யுண்டோ! சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல், வந்தே மாதர மென்பார்!-கிளியே! மனதிலதனைக் கொள்ளார். பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை!-கிளியே பாமர ரே தறிவார்! நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே!-கிளியே! சிறுமை யடைவாரடீ! சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி-கிளியே! செம்மை மறந்தாரடி!