உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

தந்த பொருளைக் கொண்டே — ஜனம்
        தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை – இவர்
        அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

3. சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்
        சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன் – வெகு
        தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால்.எவனோ செல்வான் — அவன்
        ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்;
எப்போதும் கைகட்டுவார் – இவர்
        யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார். (நெஞ்சு)

4. நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
        நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
கொஞ்ச மோபிரி வினைகள்? – ஒரு
        கோடி என்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் – அப்பன்
        ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்.
நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு
        நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

5. சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
        சாத்திரப் பேய்கள்சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் – ஒரு
        கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச்
        சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங் கொண்டே இவன்சைவன் – இவன்
        அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)