பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இந்த இடத்திலே ஒன்று நினைவுக்கு வருகின்றது. பண்டைக் காலத்திலெல்லாம் மன்னனே உயிரென்றும் மக்கள் உடலென்றும் எண்ணிவந்தனர். ஆனல் கம்பர ஒர் அற்புதமான கற்பனையை வெளியிடுகின்ருர். தமது இராமாயணத்திலே மன்னனே உடலென்றும், மக்களெல் லாம் உயிரென்றும் அவர் ஒரு புரட்சிகரமான சிந்தனையைத் தோற்றுவிக்கின்ருர். அதேபோல அரசனுக்குரிய சில கடமைகள் உண்டென்றும், நாட்டைப் பாதுகாத்தலே அவன்கடைமை என்றும், தனது விருப்பம்போல் நாட்டை என்ன வேண்டு மாலுைம் செய்யக் கூடாதென்றும், ஒரு புதிய சிந்தனையை எ ழு ப் பு கி ன் ரு ர் நம் கவிஞர். அரசனுக்குரியதெல்லாம் நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி புரிவதுதான். தன் விருப்பப்படி அதைத் தன் சொத்தாக எண்ணிவிடச் கூடாதென்றும் கீழ்க்கண்ட வரிகளிலே தெளிவாகக் கூறு கின்ருர் பாரதியார். அந்த அழகிய வரிகளை இனி நோக்குவோம்: கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத்திழத்தல் போலும் ஆயிரங்களான-நீதி யவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான்-சிச்சீ! சிறியர் செய்கை செய்தான் "நாட்: மாந்த ரெல்லாம்-தம்போல் நரர்களென்று கருதா ஆட் டு மந்தை யாமென் றுலகை, அரசரெண்ணிவிட்டார் எாடரு முண்மை நூல்கள் பலதாங் காட்டினர்க ளேனும் நாட்டு ராஜந்தி-மனிதர் நன்கு செய்யவில்ல். ஒரஞ் செய்திடாமே தருமத்துறுதி கொன் றிடாமே,