உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


நாலாம் அத்தியாயத்தில் மண்ணுலகத்தைப்பற்றி நகைச் சுவையோடு எழுதியிருப்பதை இனிக் கவனிப்போம்:

"எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துகளுக்கப்பால் ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூலி கொடுத்து வாஸம் செய்து கொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அந்த வீட்டைக் கொஞ்சம் வர்ணிக்கலாமா? காந்தர்வ நாட்டைப்பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள ஸௌகரியங்களைப் பற்றிச் சிறிது கேளுங்கள்.

நானிருந்த வீட்டிற்கு முன் பக்கத்திலே ஓர் கூடமும் அதைச்சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்கே பார்த்த வீடு. அந்த கூடத்திற்குத் தென்புறத்திலே ஒரு முற்றம். இது முன்பகுதி. பின் பகுதியிலே சில அறைகள் ஒரு முற்றம். மேல் மெத்தை; அதில் இரண்டறைகள் இவ்விரண்டு பகுதிகளுக்குக்கும் பொதுவாகத் தென் பக்கத்திலே கொல்லைப்புறத்தில் ஓர் கிணறும் தண்ணீர்க் குழாயும் உண்டு. பின் பகுதியில் நான், என் சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி, என் குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ஓராயர் பெரிய குடும்பத்தோடிருத்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபி மண் முத்திரைகள் எத்தனையோ, அத்தி குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடிய அவருடைய பந்துக்கள் சிலர் வஸித்தார்கள்.

நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடமென்று ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும்.