உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


கூட்டத்தாருக்கு அது கூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக்கொண்டே இருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்றொன்று அழுதுகொண்ட யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் இனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ. அல்லது கடவுளையோ, அல்லது ராயரைத்தானோ. யாரையோ கன்னட பாஷைபிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கிவிடுவாள்.

ராயர் வீட்டு விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது வீட்டுச் சம்பிரமங்கள் இதைக் காட்டிலும் விசேஷம்.

கதையை இடையிலே விட்டு விட்டேன். வீரராகவ முதலி தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேனா? வரும் வழியிலே ஜட்கா வண்டிகள், துரைகள் போகும் கோச்சுகள், புழுதி இரைச்சல், துர்நாற்றம், இவற்றை யெல்லாம் கடந்து, முன் பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துக்களுக்கெல்லாம் தப்பிப் பின் புறத்திலே மெத்தைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே, எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேஹிதர்கள் வந்தால் அவர்களுடன் ஸல்லாபம் முதலிய நாலா பிற விஷயங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட அறையின் வெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். 'தலைநோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா' என்றேன். 'ஆமாம்; இரண்டு நாளைக்கொருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்து விடும், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் சரிதான். பால்காரி வந்து மத்யானம் பணம் கேட்டுவிட்டுப்