பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திரங்கள், பொய் சாஸ்திரங்கள், இரண்டுங் கலந்தன.-- எத்தனையோ வித சாஸ்திரங்கள் பயிற்றுகிரு.ர்கள். ஆனல் ஸ்வதந்திரம், ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம்-இவை அத்தனை ஜாக்கிரதையாக கற்றுக் கொடுப் பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின் படி ஒழுகவேண்டுமென்றும் அங்ங்னம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகு மென்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமேயில்லை. இந்த விஷயத்தைக்கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிரு.ர்கள். ஆனல் ஒழுக்கப் பயிற்சியில்லை. புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப் பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்த த்ருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது. கனவினும் இன்னது மன்னே வினைவேறு சொல் வேறுடையார் தொடர்பு என்று திருவள்ளுவர் பாடியிருக்கிரு.ர். இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேருெரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது என்பதேயாம். பி. ஏ. எம். ஏ. பரீrைகள் தேறி வக்கீல்களாகவும், உபாத்தியாய ராகவும், என்ஜினிர்களாகவும், பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், அய்யங்கார், பிள்ளை முதலிய வர்களில் எவராவது ஒருவர் தன் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தி யிருப்பாரா? 'பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால்