உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

 செய்து தன்னுடைய யஜமான விசுவாஸ்த்தை உலக சரித்திரத்தில் நிலை நிறுத்தி வைத்தாரோ, அந்தக் கான்ஸ்டன்டைன் ராஜாவே மீளவும் பட்டத்துக்கு வரவேண்டுமென்று தேசத்தில் பெரும்பகுதியார் உறுதி செய்து விட்டார்கள். இந்த விஷயத்திலும் நேசக் கக்ஷயின் முக்கிய வல்லரசுகளுக்குள்ளேயே, தெளிவான அபிப்பிராய பேதங்கள் தோன்றியிருக்கின்றன. யுத்தம் முடிந்து, யுத்தத்திலே தாமடைந்த வெற்றியின் லாபங் களைப் பங்கிடத் தொடங்கிய கால முதல் நேசக் கக்ஷி ராஜ்யங்களுக்குள்ளே அபிப்பிராய ஒற்றுமைகளைக் காட்டிலும் அபிப்பிராய பேதங்களே அதிகமாக ஏற்பட்டு வந்திருப்பதைக் கவனிக்குமிடத்து,அவற்றுடன் இப்போது புதியதோர் ஸங்கடம் நேர்ந்திருப்பதொரு மிகையாகத் தோன்ருது. 'முழுகக் குளித்தால் பிறகு குளிரில்லை' யென்பது தமிழ் வசனம். சில தினங்களில் முன்பு பார்லிமெண்ட் ஸபையில் மிஸ்டர் போனுர்லா பேசிய போது, கிரேக்க தேசத்தின் ஸம்ரக்ஷக பதவியைப், ப்ரான்ஸும், இங்கிலாந்தும் கைவிட்டு விட்டதாகவும், ஆதலால் இப்போது அந்நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடும் அதிகாரம் அவ்வல்லரசுகளுக்குக் கிடையா தென்றும் தெரிவித்தார். ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளோ கான்ஸ்டன்டைன் ராஜாவை மறுபடி கிரேக்க ஜனங்கள் பட்டத்துக்கு வைக்கக் கூடாதென்று பஹிரங்கமாக ஆக்ஷேபித்து வருகிருர்கள். இனி நேசக் கக்ஷியைச் சேர்ந்த மூன்ருவது ஐரோப்பிய வல்லரசாகிய இத்தாலியின் அபிப்பிராயத்தைக் கவனித்தால், பிரான்ஸ் சொல்வதற்கு நேர் விரோதமாக இருக்கிறது. கான்ஸ்டன்டைன் ராஜா பட்டத்துக்கு வராமல் தடுக்கும் எந்தக் கார்யங்களிலும் தான் ஸம்பந்தப்பட முடியாதென்று இத்தாலி ஸ்பஷ்டமாகத் தெரிவித்த