பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரசாமி வrத்தியார் : ஆமாம், காரணம் ால் லும் காரணம்? எலிக்குஞ்சு செட்டியார் : நமது சபையின் காரியங் ஆள வாரந்தோறும் சென்னப்பட்டணத்துப் பத்திரிகையில் பிரசுரம் செய்யும்படி நாம் காளிதாஸரை நியமித்தோம். அதன்படியே அவர் முதலாவது கூட்டத்து விவஹாரங் அளச் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு எழுதினர். அதற்கப் பால் நடந்த கூட்டங்களில் ஒன்றைப் பற்றியேனும் எழுத வில்லை. இன்று நடப்பது ஆருவது அல்லது ஏழாவது கட்டமென்று நிாேக்கிறேன். இவர் இத்தனை அஜாக் கிரதையுடன் நமது சபையாருக்கு வாக்குத் தவறியது பற்றி இவரை நீக்கிவிட வேண்டுமென்று சொல்லுகிறேன். காளிதாஸன் : சபையார் என்னை மன்னிக்க வேண்டும். நமது சபை விவகாரங்கள் ரஸ்மாக இருக்கும் சமயங்களில் பத்திரிகைக்கு எழுதலாம். அப்படி விசேஷ மொன்றும் சென்ற கூட்டங்களில் நடக்கவில்லை. ஆகையால் எழுதவில்லை. எலிக்குஞ்சு செட்டியார் : ரஸம், ரஸ்மில்லை. அதெல் லாம் நீர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சபையில் நடக்கும் விஷயங்களை நீர் அப்படியே எழுதிவிட வேண்டும். பத்திரிகைக்காரர் போடாவிட்டால் நீர் ஜவாப்தாரி இல்லை. (இங்ங்னம் சிறிது நேரம் வாதங்கள் நடந்த பின் கடைசியாக சபையார் செய்த முடிவு-காளிதாஸரை நீக்கி விட வேண்டுமென்று செட்டியார் சொல்லியது பிழை. சபையில் என்ன நடந்த போதிலும் அதை அப்படியே காளிதாஸர் பத்திரிகைக்கு எழுதிவிட வேண்டும். கொஞ்சங்கூட ரஸ்மில்லாத வார்த்தைகள் ஒரு கூட்டத்தில் பா.-4