பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5】 தம்மிஷ்டப்படி அரசாண்டுவந்த ஜார் சக்ரவர்த்தங்களின் அதிகாரம் தொலைந்து ஜனங்களின் அதிகாரம் ஏற்பட்டது. நற்றி உமக்கு சந்தோஷமுண்டாகவில்லையா? காளி : வாஸ்தவந்தான். ஸ்ந் : என்ன ஒய் வாஸ்தவந்தானென்று இலேசாகச் சொல்லுகிறீரே? ஜ ன தி கா ர த் து க் கு த் தானே ஐரோப்பாவில் இத்தனை பெரிய சண்டை நடக்கிறது? அதற்காகத்தானே நம்முடைய பிரிட்டிஷ் சிநேகிதர்களும் மற்ற தேச ராஜயத்தாரும் கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைக்கிருர்கள்? லக்ஷக் கணக்கான மணி தர்களைப் பலியிடுகிருர்கள்? பூமண்டல முழுவதும் ஜனதிகாரமும், விடுதலையும் நிலைபெறும். அப்பேதுதான் நம்முடைய நேச ராஜ்யங்களின் நோக்கம் முழுதும் நிறைவேறி, இவர் களுடைய கீர்த்தி எக்காலத்திலும் அழியாமலிருக்கும். ருஷியாவில் பழைய ராஜாங்கத்தை எதிர்த்து, அதன் பொருட்டாகச் சிறைப்பட்டிருந்த தேசாபிமானிகளை யெல்லாம் விடுவித்துவிட்டு அவர்களுக்குப் பதிலாக ரஹஸ்யப் போலீஸாரைச் சிறைக்குள்ளே தள்ளி விட்டார்களென்று பத்திரிகையில் வாசித்தேன். இதில் எனக்குண்டான ஸ்ந்தோஷம் சொல்லி முடியாது. காளி : சரிதான். ஸந் : ருஷியாவிலே இதுவரை தேசாபிமானிகள் பட்டுவந்த கஷ்டங்களை ஆதிசேஷனலே கூட வர்ணிக்க முடியாது. போலீஸ்காரரின் சந்தேகத்துக்குட்பட்டவர்கள் லைபீரியாக் காடுகளிலும், உள்நாட்டுச் சிறைகளிலும் துன்பப்பட்டு மடிந்த கொடுமைகளை யெல்லாம் நீர் சரியாகக் கேள்விப்பட்ட தில்லையென்று நினைக்கிறேன்.