பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பதிவிரதை ஆனல் "பதிவிரதை' என்ற கட்டுரையில் தான் பி இல் விழைகின்ற பேதமையைக் குறித்துத் தமது ச்ெ கையை ஆணித்தரமாக முழங்குகின்ருர் பாரதியார். "கற்புநிலை என்ருல் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்" என்று கவிதையில் சுருக்கமாகச் சொன்னவர். அதை மி, அழுத்தமாக, இடியோசை எனக் கேட்கும் வகையில் இங்கே கர்ஜிக்கிருர், கட்டுரையைப் பார்ப்போம். ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் விரும்புகிருர்கள். அதிலே கஷ்டம் 6Tira வென்ருல், ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆன் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி, மக்கள் களாக இருக்கவேண்டு மென்பதில் எத்தனை ஆவலோ, இருக்கிருனே, அத்தனை ஆவல் இதர ஸ்த்ரிகளின் ப்தி விரத்யத்திலே காட்டுவதில்லை. ஒவ்வொருவனும் ஏறு: குறைய தன் இனத்து ஸ்த்ரீகளை பதிவிரதை என்று நம்புகிருன். ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையா: இருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதி: வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதி திருக்கிறது. ஆனால், பதிவிரதை இல்லை என்பத ற்காக் ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வு படுத்து அவளைத் தெருவிலே சாகும்படி விடுதல் அநியாயத்திலும் அநியாயம் அட பரம மூடர்களா! ஆண்பிள்ளைகள் தவறினர் ஸ்த்ரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும்