பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - குயிற் பாட்டு பேசும் இடைப்பொருளின் பின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர் தம் செய்கை விதமும் தெரிகிலன்யான்; மேலேக் கதையுரைக்க வெள் கிக் குலையுமனம்; காலேக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்; 30 தங்கம் உருக்கித் தழல்குறைத் துத் தேளுக்கி; எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ ? கண்ணேயினி(து) என்று ரைப்பக், கண் ணுக்குக் கண்ணுகி 35 விண்ணே அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்ருே ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் மேலவரும் அ..தோர் விரியுமொளி என்பாரேல், நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை ஒப்புளதோ ? புல்ல நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40 மண்ணேத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து விண்ணே வெளியாக்கி, விந்தைசெயும் சோதியினைக் காலப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்; தாஅ புறத்து முயிர் நாதங்கள் ஓங்கிடவும் இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன் 45 துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளிரோ! 7. குயிலும் மாடும் காலத் துயிலெழுந்து காலிரண்டும் முன்போலே சோலைக்(கு) இழுத்திட நான் சொந்தவுணர் வில்லாமே சோலேயினில் வந்து நின்று சுற்று முற்றுந் தேடினேன்; கோலப் பறவைகளின் கூட்டமெல்லாம் காணவில்லை; மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே J. நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும் கீழே யிருந்தோர் கிழக்காளே மா(டு) அதனை ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும் கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சிலனல் கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வெயர்த் (தேன்; Í {}