பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தெய்வீகக் கவிஞர் பெருமான் திருத்தகு சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் என்ருலே உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பொங்கி எழும். வெண் சொல்லும், நுண்பொருளும் அமைந்து கற்போர் கேட்போர் அனேவரையும் ஒருங்கே பிணிக்கும் மாண்பு மிக்கது; கற்ருேர்க்கும், கல் லாதார்க்கும் ஒரு புத்தமுதாய் ஒன்பான் சுவையும் ஊறிப் பெருகுவதாய் அமைந்துளது. தொட்டனேத் துாறும் மணற்கேணி போலக் கற்குங் தொறும் புதிய புதிய கருத்துக்களேத் தோற்றுவித்து அறிவை வளர்க்கும் இயல்பு வாய்ந்தது. அழிவின்றி உலகில் நிலைத்து நிற் கும் பெருமை மிக்கது. தெய்வீகத் தன்மை வாய்ந்த இயற்கைக் கவிஞர் பெருமானுகிய பாரதியார் பாடியருளிய பாடல்களுள் குயிற் பாட்டும் ஒன்று. அது கற் பனேக் கவியாகவே இருப்பினும், உண்மை யாகவே கிகழ்ந்த கதைபோன்று காட்சியளிக் கின்றது. அகப்பொருட்டுறைகளும், புறப் பொருட்டுறைகளும் விரவி வரப் பாடியிருப்பது வியந்து பாராட்டுதற்குரியது. வேதாந்தப் பொருளேயே காதற் களஞ்சியமாக அமைத்துப் பாடியுள்ளது கவிஞர் பெருமானுக்கு வேதாந்த துரல்களிலும் மிக்க பயிற்சி உண்டு என்பதைக்