பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா (kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்ருெரு மாளுக்கர் இருந்தார். இந்த ஹொகவியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய வாஷோ மத்ஸவா புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினர். "தீப்பட்டெரிந்தது, வீழுமலரின் அமைதியென்னே!" மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ, அத்தனை அமைதி யுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகின்ருன் வீடு தீப்பட்டெரிந்தது. ஆனல் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லையென்ற வி ஷ ய த் ைத ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார். சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத்தன்மை யென்று நோகுச்சிப்புலவர் சொல்லுவதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர் மாருக நிற்கிறதென்றும் சொல்லுகிருர். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது; கடுகைத் டுளேத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆலுைம் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலேகூட எல்லாக் கவிதை யும் ஹொகூஷி பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு."