பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கிடைக்கும். இதை நீயே விரைவில் அறிந்துகொள்வாய்” என்று சொன்னராம். பாரதியார் வாக்கு மெய்யாகிக் கொண்டு வருவதை நாம் இன்று அறிய முடிகின்றது. மேலும் மேலும் அவற்றின் புகழ் ஓங்கவும் செய்யும் என்பது திண்ணம். வெறும் தோத்திரிப் பாடல்கள்தாமே என்று நாம் அலட்சியமாக விட்டுவிட்டால், பாரதியாருடைய ஒரு முக்கியமான வாழ்க்கைப் பண்பையே அறியத் தவறிவிட நேரிடும். மேலும், பல அற்புதமான இசைப் பாடல்களை இழந்தவர்களாவோம். ஆகையால், தோத்திரப் பாடல் களும் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.