பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 'மூலைக் கடலினையவ் வானவளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்: நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற்கனவில் தன்னை மறந்தலயந் தன்னில்இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன் பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன். ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்; ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்; "வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’ என்றுமொழிந்தேன். ‘'சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே, திருமித் தழுவி, "என்ன செய்திசொல்” என்றேன்: நெரித்த திரைக்கடலில் என்னகண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்னகண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள்என்ன? பேகதி" என்ருன், 'நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம்அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை; சிரித்த ஒலியில் நின் கைவிலக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்." 3