பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆனல் அவை மாயமாய் மறைந்துவிடுகின்றன. கவிஞர் மூன்ரும் நாளும் காதலுக்குக் கண்ணில்லை’ என்கின்றபடி மாஞ்சோலைக்குச் செல்லுகின்ருர். அன்றும் அங்கு குயில் ஒரு மாட்டினிடம் காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறது. மாட்டிடம் நகைச் சுவையோடு காதல் மொழி பேசுவதைக் கேளுங்கள்: 'நந்தியே பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோற் பொற்புன்டங் சாதியுண்டோ? மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர்தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ் வார். காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே! நீள முகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும், மிஞ்சு புறச்சுமையும், வீரத் திருவாலும், வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும், ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல் காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன். பார வடிவும் பயிலு முடல்வலியும் தீர நடையும் சிறப்புமே இல்லாத சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான்பிறந்தேன், அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம் சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி என்னபயன் பெற்றேன்? எனப்போலோர் பாவியுண்டோ? சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில் போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ? நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே, தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே