பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கூட்டத்தாருக்கு அதுகூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்கமுடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காசநோயாதலால் அவர் இருமிக்கொண்டே இருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்ருென்று அழுதுகொண்டேயிருக்கும். கர்ப்பிணியாகி அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, அல்லது கடவுளையோ அல்லது ராயரைத்தானே, யாரையோ கன்னட பாஷையிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கி விடுவாள். ராயர் வீட்டு விஷ்யங்கள் இவ்வாறிருக்க, நமது வீட்டுச் சம்பிரமங்கள் இதைக்காட்டிலும் விசேஷம். கதையை இடையிலே விட்டுவிட்டேனே. வீரராகவ முதலி தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேன? வரும் வழியிலே ஜட்கா வண்டிகள், 'துரைகள் போகும் கோச்சு’கள், புழுதி, இரைச்சல், துர்நாற்றம், இவற்றை யெல்லாம் கடந்து, முன் பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துக் களுக்கெல்லாம் தப்பிப் பின்புறத்திலே மெத்தை’க்கு வந்து சேர்ந்தேன். அங்கே, எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேஹிதர்கள் வந்தால் அவர்களுடன் ஸல்லாபம் முதலிய நாளுவித விஷயங்களுக்கு உபயோகப் படுத்தப்பட்ட அறையில் வ்ெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்ருள். தலைநோவு பொறுக்க முடியவில்லை, கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா என்றேன். "ஆமாம்; இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த்தலைவலி வந்துவிடும், என்னை வேலை யேவுகிறதற்காக, அதெல்லாம் சரிதான், பால்காரிவந்து மத்யானம் பணம் கேட்டுவிட்டுப் போனள். ராயர் வீட்டு