பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


கொண்டிருந்தார் என்பது புலனாகின்றது. அதுமட்டும் அன்று; அவ்வந்நூல்களில் தோய்ந்து அவ்வவற்றின் உயிரோட்டமும் நாடித்துடிப்புமான மூலக்கருத்துக்களை உணர்ந்து வெளியிட வேண்டும் என்ற உள்ளுணர்வைக் கொண்டிருந்தார் என்பதும் புலனாகின்றது. ‘கவிஞனது இலக்கியப் படைப்பில் அவனது உள்ளம் ஆழ்ந்து கிடக்கும். அதனைக் காணாது கற்பது இலக்கியக் கல்வியாகாது. அஃது ஒரு பெருங்குறையுமாகும் என்ற கருத்துடையவர் பாரதியார்.

நம்நாட்டு மக்களது தன்னுணர்வற்ற போக்கையும், குறிக்கோளற்ற கோணலையும் பலதுறைகளிலும் கண்டு நொந்த அவர் மிக வெறுத்துச் சாடுகின்றார். அச்சாடலில் காப்பியம் கற்போர்தம் நுனிப்புல் மேயும் முறையை,

“அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்”

—எனக் கூறிக் கவல்கின்றார். இக்கவற்சியுடையவர் இலக்கியத்தில் தம் பார்வையை எவ்வாறு செலுத்தியிருப்பார் என்பதை அறிய முடிகிறது. மேற்கண்ட அடி பாரதியாரது தன்வரலாற்றுப் பாடலில் உள்ளது. அவர் தன்வரலாற்றுப் பாடல்களில் தமது உள்ளுணர்வுகளையே வடித்துள்ளார். எனவே, அவர் தாம் கற்றுச் சுவைத்த இலக்கியங்களில் அவற்றையாத்த கவிஞர்களது உள்ளம் ஆழ்ந்து கிடப்பதைக்கண்டு உணர்ந்தவர் எனக் கொள்ளலாம்.

தம் உள்ளங் கவர்ந்த மூன்று புலவர்களது உள்ளங்களை அவரவரது இலக்கியங்களில் கண்டிருப்பாரன்றோ? அவ்வுணர்வை அவர்வெளிப்படுத்தியுள்ளபாங்கைக்காணலாம்

16