பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


கண்ணகியாரை நாம் முதலில் மணவறையில் காண்கின்றோம். அடுத்து முதலிரவில் போற்றப்படுகின்றார். அப்போற்றி எத்தகையது?

கண்ணகியார் கோவலனுக்கு முதல் இரவு. நிலாமுற்றத்தில் மணிக்கால் கட்டில் மேல் இருவரும் குலாவினர். குலாவல் மொழிகளைக் கோவலன் பொழிகின்றான். இளங்கோவடிகளார் பொழிய வைக்கின்றார். முதலில் இனிய அன்புச் சொற்களால் அழைக்கின்றான். “மாசறு பொன்னே! வலம் புலிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! பாவாய் மருந்தே!” என்றெல்லாம் அழைத்தான். இவைகள் யாவும்! விளிக்கும்-அழைத்து மகிழும் சொற்கள். தொடர்ந்து கண்ணகியாரைப் புகழத் தொடங்குகின்றான். புகழ்ச்சியில்; முதல் தொடர்,

“மலையிடைப் பிறவா மணியே என்கோ”
-என்பது முதற்புகழ்ச்சி

மணியாக அமைந்தது. முதன் முதலில் கண்ணகியாரை மணியாக வண்ணிப்பதை அவருக்குரிய கொழுநன் கோவலன் வாயிலாக அமைத்தது ஒரு தனிக்குறிப்பிற்கு உரியது எனலாம்.

அடுத்து வேட்டுவவரியில் சாலினி என்னும் பூசாரிச்சி கண்ணகியாரைப் போற்றுகின்றாள். தன் நிலையில் அன்று தெய்வமுற்ற நிலையில் நின்று போற்றுகின்றாள்:

இவளோ,
கொங்கச் செல்வி; குடமலை யாட்டி”
-என்று

தொடங்கிய சாலினியின் வாயில் மணியை வைக்கின்றார் அடிகளார்;

பா. இ.-4

49