பாரதியின்
- “ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய”
நாவில் மற்றொரு மணியை மணிக்கு அழகும் ஊட்டி,
- “திருமா மணி” .
- என்று நிறைவேற்றச் செய்கின்றார். இவ்வாறு சாலினியின் போற்றுதல் வாயிலாகக் கண்ணகியாரை ‘மணி’யாக அதிலும் ‘மா மணி’யாக அதிலும் ஒப்பற்ற ‘ஒரு மா மணி’யாக மேலும் ‘திரு மா மணி’யாகக் காண்கின்றோம். கொழுநன் வாயால் மணியாகிய கண்ணகியார், அடுத்துத் தெய்வமுற்ற வாயால் இரண்டு மணியாகின்றார்.
அடுத்து அடைக்கலக் காதையில் மதுரைமா நகரின் புறஞ்சேரியில் கண்ணகியார், கோவலன், கவுந்தி அடிகள் மூவரும் உளர். மாடல மறையோன் அங்கு வந்து சேர்கின்றான். கோவலனை அவன் அறிவான். இங்கு இக்கோலத்தில் கண்டு வருந்துகின்றான். கோவலனது பெருமைகளையெல்லாம் பேசுகின்றான். பேசி முடிப்பவன் கண்ணகி யாரையும் இணைத்துக் காட்டி இந்நங்கையுடன் வந்தது ஏன்?-என்கின்றான். இங்கு கண்ணகிக்கு அவன் கூட்டியுள்ள-அடிகளார் அமைத்துள்ள-அடைமொழிகள் நோக்கத்திற்கு உரியன.
- “இத்திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”
தொடர் அது. கண்ணகியாரை மணியாய்-மாமணியாய் மாடலன் வாய் போற்றிற்று. மாடலன் அம்மணியையும் ‘மா மணி’யாய் மட்டுமன்று, “தகு மா மணியாய்” மேலும் “திரு தகு மாமணியாய்” அடுக்கிப் போற்றினான், மணி மட்டு மன்று மணியில் கொழுந்து மணியாம்.
50