பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




அதனையும், சிலப்பதிகாரத்தில் கோக்கப்பட்டுள்ள வரிசையில் மாலையாகக் காணலாம்:

“மணியே எங்கோ” சிலம்பு: காதை: 2 அடி:
“ஒரு மல் மணி”
“திரு மா மணி”
“மா மணிக்கொழுந்து”
“முத்தக மணி”
“மணியுடை அரி”
“அணி மணிக் காற்சிலம்பு”
“தெரித்தது மணி”
“மணி கண்டு”
“திருத்தகு மாமணிக் கொழுந்து”
—இவை சிலம்பில் ஆங்காங்கே

ஒளிர்ந்தாலும் இவ்வாறு கோத்துக் காணத்தக்கவை. கோத்த மணிமாலையில் எத்துணை மணிகள் உள்ளன. எண்ணினால் பத்து மணிகள் ஒளிரும். ஒன்பான் மணிமாலை சிறந்ததுதான். அதற்கும் ஒரு தனி மணியாக-தொங்கும். பதக்கம் ஒன்று வேண்டாவா? கண்ணகியார் தமிழப் பெண்களின் கற்புப் பதக்கம் ஆவாள். அவரையும் பதக்கமாக ஒன்பான் மணிமாலையில் இணைத்து ‘பதிண்மணிமாலை’யாகச் சிலப்பதிகாரத்தைக் கொள்ளலாம்.

இப்படி ஒரு பார்வையைப் பாரதியார் சிலப்பதிகார இலக்கியத்தில் ஒட்டியிருக்கலாம்; ஒட்டாமலும் இருக்கலாம்.

மேலே சிலப்பதிகாரத்தில் தொகுக்கப்பட்ட மணி அமைப்புகளை இளங்கோவடிகளார் திட்டமிட்டு அமைத்துள்ளார் என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்றாலும். அப்படியொரு அருமையான அமைப்பு உள்ளது.

52