பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




ஏற்றப்பாட்டு முதலிய நாட்டுப் பாடல்களைக் கேட்டு அவர் கொண்ட உணர்வை,

“நெஞ்சைப் பறிகொடுத்தேன்”
-எனப் பாடினார். அவரது

இலக்கிய உணர்வைப் பொருத்தவரை பேரிலக்கியங்கள் போன்றே. நாட்டிலக்கியங்களும் நெஞ்சத்தை ஈர்த்தன; கவர்ந்தன: அள்ளின; பறித்தன.

நாட்டுப்பாடல்களின் இசையில் ஒன்றிய நேரத்திலேயே அவற்றில் அமைந்த இனிய சொற்களிலும் ஈடுபட்டார். அவற்றின் கவிதைப்பாங்கை நோட்ட மிட்டிருக்கின்றார். அவை, “கொச்சைச் சொற்களையும்” கொண்டிருந்தாலும்

“கொச்சை மொழிகளும் ரசக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும். ஒரு கூடைப் பதரில் ஒருளக்கு அரிசியகப்படும். அதை நாம் இழந்துவிடக் கூடாது.”
(பெண்ணின் பாட்டு கட்டுரையில்)
—என அவற்றிலும் சுவை கண்டார்.

ஒரு சிறு அளவு இலக்கியப் போக்கு தென்படினும் அதனையும் இழந்துவிட மனமில்லாதவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

எளிய பாடல்கள் என்று கவனமின்றிக் கேட்டுவிடக் கூடாது. அவற்றையும் இலக்கிய உணர்வோடு பார்க்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. “பெண்ணின் பாட்டு” என்னும் அக்கட்டுரையிலே,

“கவிதைத் தேட்டம் உடையோர் நமது பெண்களின் பாட்டைக் தேடிப் பார்த்தால், சிற்சிலவிடங்களில் நல்ல கவிதை கிடைக்கும்.

54