இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கியப் பார்வை
திருவள்ளுவரை அடுத்துத் தாயுமானவர் பாடலைக் கையாண்டுள்ளார். அவரது “ஆசைக்கோர் அளவில்லை” என்னும் பாடலைக்கொண்டு, தமது“சுய சரிதை”(42) யில்,
- “ஆசைக் கேரள வில்லை விடயத்துள்
- ஆய்ந்த பின்னங் கமைதி யுண்டாமென
- மோசம் போகலிர் என்றடித் தோதிய ,
- மோனி தாளினை முப்பொழு தேத்துவாம்”
-என
அமைத்தார்.
“யான்” என்னும் கவிதையைத் தொடங்குபவர், அதன் முகப்பாக,
- “அருளால் எவையும் பாறென்றான்-அதை
- அறியாதே கட்டியென் அறிவாலே பார்த்தேன்”
-என்னும்
தாயுமானவர் பாடலை வைத்தார்.
இது போன்று பட்டினத்தார் பாடலாகிய,
- “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
- மெல்லப் போனதுவே.”
—பட்டினத்துப் பிள்ளையார்
-எனத் தமது “சுயசரிதை”யைத் துவங்குமுன் முகப்பாக அமைத்தார்.
தாயுமானவர் பாடல்களைத் தமது கட்டுரைகளில் பல இடங்களில் அமைத்துள்ளார்.
திருவள்ளுவர், தாயுமானவர் ஆகிய இருவரது பாடல்களை அதிகம் கையாண்டாலும் பாரதியார்க்கு
59