பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


இவ்வாறு குறிப்பிட்ட சொல்லுக்குப் பொருள் குறிப்பார். தனிச்சொல்லுக்குப் பொருள் குறித்துத் தொடர் விளக்கம் தருவார். இலக்கிய வழக்கு இல்லையென்று உலக வழக்கு என்று காட்டுவார்.

மேலும்,
பாட்டு 13-வரி 4: மலர்விழிக் காந்தங்கள்-
காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில்
செய்துகொண்டிருக்கும்(மாதர்) விழிகள்”
—என விளக்கி நயம்காட்டுவார். பழைய

உரையாசிரியர் சொல்லமைப்பில் பார்வையை வைத்து,

பாட்டு 196-வரி 6: பழி மக்காள்- பழிப் பிள்ளைகளே பழிக்கு இடமாகிய என்க.
—“என்க” என்னும் சொன்முறை

யைக் கையாள்வார்.

“பாட்டு 199-வரி 1: கெலித்திடல் - வெல்லுகல். இது திசைச்சொல், கிராமியம்”
—என இலக்கணம் குறிப்பார்.

நாட்டுப்புற வழக்கு என்பார்.

“பாட்டு 19:இது எண் சீர்; ஈற்றது மா”
-என யாப்பிலக்கணம்

குறிப்பார். இவ்வாறு பாஞ்சாலி சபதப் பாடல்களுக்கு உரை வகுத்துள்ளார்.

இது குறிப்புரை வகை.
‘பாஞ்சாலி சபத’ உரைப்பகுதியில்,

பா.இ-5

65