பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ராகவ சாஸ்திரி கதை 130

முதலிய தர்மங்களை நீர் ஹிந்துக்களுக்குப் புகட்டுவதிலும் எனக்கு யாதொரு ஆட்சேபமும் கிடையாது. ஆனால் நாம் இப்போது கைக் கொண்டிருக்கும் தர்மத்தை உம்மிடம் சொல்லி விடுகிறேன். சம்மத முண்டானால் அதை இந்தியாவில் மாத்திரமன்று பூமண்டலம் முழுதும் சென்று முரசு அடிக்கக்கடவீர். அந்த தர்மம் யாதெனில், மானுடரே நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. ‘தெய்வமே சரண்” என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாகப் பயன் பெறும். மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்து விட வேண்டும். அதுவே யாகம். அந்த யாகத்தை நடத்துவோருக்கு தெய்வம், வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் முதலிய எல்லாவிதமான மேன்மைகளும் கொடுக்கும். இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில் சொல்லப் படுகிறது. அதனை அறிந்தால் பயமில்லை. ஹறிந்துக்களுக்குத்தான் இவ்விதமான தெய்வ பக்தி சுலபம். ஆதலால் ஹறிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப் பயமி ல்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை துாக்கி விட்டாலொழிய இந்த பூமண்டலத்துக்கு நன்மை ஏற்படாது. உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு சகல தேசங்களிலும் நரகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அஹங்காரத்தை வெட்டி எரிந்து விட்டால் மனித ஜாதி அமரர் நிலையடையும். தன்னை மற, தெய்வத்தை நம்பு. உண்மையே பேசு. நியாயத்தை எப்போதும் செய் எல்லா இன்பங்களையும் பெறுவாய். இப்போது பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகிறது. அந்தப் புதிய யுகம் தெய்வ பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு நடை பெறப் போகிறது. ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை பெறுவார்கள். இது சத்தியம். இதை எட்டு திசைகளிலும் முரசு கொட்ட முடியும். இதுவே யான் சொல்லக் கூடிய விஷயம்” என்று காளிதாஸர் கூறி முடித்தார்.