பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24._திலகர் அறியது 170

24. திலகர் கூறியது:

நாற்குலம் (சதுர்வர்ணம்) என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.

“சென்ற காங்கிரஸ் ஜன சபை லக்நெள நகரத்தில் கூடிக் கலைந்த பிறகு ரீமான் லோகமான்ய பால கங்காதரத் திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்கு ராம் லிலா நாடக வெளியே பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக் கூட்டம் ஒன்று கூடி அவரை சுவராஜ்ய போதனை செய்யும் படி வேண்டினார்கள். ஸ்வராஜ்யப் பேச்சுக்கிடையே அவர் ஜாதிக் கட்டை முறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழி பெயர்த்துக் காட்டுகிறேன். -

திலகர் சொன்னார். பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லகூடிணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

“நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல. குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின என்று கீதை சொல்லுகிறது. அதன் படி பார்த்தால் இப்போது நமக்குள் கூடித்திரியர் எங்கேயிருக்கிறார்கள்? நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள். ஹிந்துக்களுக்குள் கூடித்திரியரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால் இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகள் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத்தலைமை நமக்கில்லை. இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளை என்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்த மூளை மண்ணடைந்து போய் நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும் படி நேரிட்டிருக்கிறது.