பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

- -_ - ---

35. அருந்த சக்தி __

சுழலுகிறது எதனால்? சக்தியினால், அந்தத் தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றிவரும் படி சூரியகோளம் நியமித்திருக்கிறது எதனால்? சக்தியினால்,

ஒர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுமையும் வெல்கிறான். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம். கண்ணுக்குப் புலப்படுவதும் ஊகத்திற்குப் புலப்படுவதுமாகிய வெளியுலகங்கூட எல்லையற்றதென்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும் எல்லையற்றதாகும். அது அனந்தமானது. அதனினும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால் பலவிதப் பயன்கள் உண்டு. “யத்பாவயஸி தத்யவஸி’ எதனை பாவிக்கிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய்.

"ஆனால் இங்ஙனம் பாவனை செய்வது லேசான காரியமென்று நினைத்து விடலாகாது. உயிர் ததும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். பொறி பறக்கும் பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும். இதனை வீண் கதையென்று நினைத்து விட வேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் அதன் பலன் தெரியும்.

ஞானிகள் என்றும் யோகிகள் என்றும் சொல்லப் படுவோர் இந்த சக்தியை மனதறிந்து சிலமுறைகளை அனுஷ்டித்துப் பெறுகிறார்கள். ஸாமான்ய ஜனங்கள் விஷயம் தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர். சக்தி சிறிதும் இல்லா விட்டால் ஒருவன் கூஒன நேரம் கூட மூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது. வெளிக் காற்றிலே உலவி அத்துடன் யோகப் படுவதால் சக்தி உண்டாகிறது. சரீரத்தை உழைப்புக்கு உட்படுத்துவதால் இடை வெளியெங்கும் ததும்பிக் கிடக்கும் சக்தி அதனுள்ளே குடிகொள்கிறது. அறிவைப் பல