பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்_227

37. தமிழருக்கு:

பாரதி தனது உரைநடைப் பகுதியில் தமிழருக்குக் கூறிய வார்த்தைகளை மீண்டும் இங்கு நினைவு கூறுவோம்.

“தமிழா, பயப்படாதே, தெய்வத்தை நம்பு, உனக்கு நல்ல காலம் வருகின்றது. பயப்படாதே.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். தெய்வம் கண்ட கவிகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார்.

நமது நாட்டு ஸ்திரிகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீரியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன.

தமிழா, பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ஜாதியிரண்டொழிய வேறில்லை. என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை வாழ்க்கைத் துணை என்றார்கள். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆனும் பெண்ணும் சமம்.

"வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு