பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்-235
சாத்திரங்கள் போதிக்கும் அறநெறியும் ஒழுக்க நெறியும், கற்பு நெறியும் அறிவு நெறியும் என்னவாயிற்று?.
ஜாதிக் கொடுமைகள், பாகுபாடுகள், வேறுபாடுகள், ஏன் இன்னும் நீடிக்கின்றன? அது பற்றிய போலிச் சாத்திரங்கள் பாரதி கூறியதைப் போல ஏன் இன்னும் பொசுக்கப் படவில்லை. சீலம் அறிவு தர்மத்தின் அடிப்படையின் நமது சாத்திரங்கள் அறிவித்துள்ள நெறிகள் ஏன் இன்னும் நிலை நாட்டப்படவில்லை? அதற்கு என்ன தடை?
நாம் சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும்
இன்னும் நாற்பது சதவீதத்திற்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாத -வர்களாக ஏன் இருக்கிறார்கள். கல்லாமையும் படிப்பில்லாமையும்
ஏன் நீடிக்கிறது? அதற்கு என்ன தடை? யார் தடை? நமது தேசபக்தி என்ன வாயிற்று? அனைவருக்கும் கல்வி என்பது தேச பக்தக் கடமையல்லவா?
‘விடு தோறும் கலையின் விளக்கம்
விதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன. ஆர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி
என்றும்,
'இன்றுை ங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீதன் கனைகள் இயற்றல் அன்னகத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டன்
பின்னருள்ள தருமங்கள் யாவும்