TCLLLLS LSLLLLLSLS TCLLLL LLCCLL LLLLLLLLTT LLLSK LLL TT B7
படும் மக்கள் பால் அன்பு காட்ட வேண்டும். அருகில் வைத்து சமத்துவமும், சகோதரத்வமும் பாராட்ட வேண்டும்” என்று வலுவாகத் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.
ஐரோப்பாவிலும், பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மிக உயர்வான மனிதாபிமானக் கருத்துக்கள் தோன்றி அவை மக்களுடைய மனதில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின. ஆயினும் அங்கு அடுத்து நடைபெற்ற வர்க்கப் போராட்ட நெருப்பில் அவை சாம்பலாயின.
இந்திய நாட்டைப் பொறுத்த வரையிலும் அன்பு வழியிலும், ஆன்மீக வழியிலும், தெய்வீக வழியிலும், மனிதர்களுக்கிடையில் இசைவும் இணக்கமும் கொண்டு வருவதற்கு இடைவிடாது முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. ---
இந்திய நாகரிகத்தின் கலாச்சாரத்தின் அறிவாற்றலின், ஞானத்தின், செயலூக்கத்தின் தர்மத்தின் அடிப்படையாக உள்ள வேதங்களில் மனிதருக்குள்ளே வேறுபாடு கற்பிக்கப் படவில்லை.
545) நாட்டில் சாதி அமைப்புகளும் அதனடிப்படையில் தோன்றிய வேறுபாடுகளும் பின்னர் ஏற்பட்டவை. அவைகளுக்கு சாஸ்திர சம்மதமில்லை.
பாரதி தனது கண்ணன் பாட்டில் ! 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர் சிலம் அறிவு தர்மம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் மேலவர் கிழவர் என்றே - வெறும்