பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(66) எளிதென்றேதும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேதும் கருதுவோன் தவறாக யோசனை பண்துகிறான். மனிதர் எத்தனை கொடியோராயிரம், முடராயிசம், புலி கரடி ஒநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்தல் ஒருவனுக்குஅதிக நன்மை பயக்கக் தக்க என்பதில் ஐயமில்லை. ஆனால் கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும் புவி வாழுங்காடும் நன்றே: எல் முன்னோர் குறிப்பிட்டபடி கடும் புவி வாழுக்காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவசக்கு அதிகக் கஉrடமாக்கக் கடிய மனிதரும் இருக்கக் கடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது கியை தாபனம் செய்வதாகிய விலக்கென்றே கருதத்தகும்" என்று பாரதியார் குறிப்படுகிறார், அதே பன்தியில் பாரதியார் இல்லறம் துறவறம் பற்றி மேலும் விவரிக்கிறார். துறவறம் சிறந்தது என்ற பாரதியார் ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லறமே சிறந்தது என்பது அவருடைய கொள்கை. இல்லறமல்லது நல்லறமில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பவர். அதனால், பகவத் கீதை ஒரு சந்நியாச ல் என்ற கறப்படும் கருத்தை மறுத்து அவர் வாதாடுகிறார். அதற்காக இல்லறம் துறவறம் ஆகிய இரட்டையும் சம நிலையில் கண்ட தாயுமானஸ்வாமியின் கரிய மத்த மதகரிமுகிற்குலமெல்ல என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி அப்பாடலுக்கு தனது உரைநடையில் பொருள் கடிார் . அது வருமாறு: மதமேரிய யானைகள் மேகக் கட்டங்களைப் போல் மலி:து சிற்கும் வாயில்களையுடைய அரண்மனையில், சந்திரனை அனார்வன போன்ற உயர முடைய மாடங்களும் கடங்களும் சிகரங்களும் சூழ்நிகிருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ்ப் பாட்டுக்கும் நாட்டியங்களுக்குமிடையே முத்தொளி வீசும் நகை பிரிகின்ற மாதர்களுடனே முத்து முந்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி யோக வழியிலே செர்ம மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல வலிய நகங்களையுடைய புலி சிங்கம் கரடி முதலியக பதுங்கிக் கிடக்கும் பொத்துகளையுடைய காட்டு மலையுச்சியில் தாமொரு பொந்தில் - - - - - 67 . . . . .