பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாரதியின் புதிய ஆத்திசூடி O

மனிதர்களில் சில பொய்யர்கள் இருக்கிறார்கள். சிலர் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுகிறார்கள். போலியான சில மனிதர்கள் போலியான சில பொருள்களை நல்ல பொருள் என்று பொய் சொல்லி ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள். அவை எல்லாம் இகழ்ச்சியான செய்கைகளாகும்.

பொய்யான சில தோற்றங்கள் இருக்கின்றன. அவைகளைக் கண்டு நாம் ஏமாறக் கூடாது. சில நூல்கள் பொய்மை யானவைகளாக இருக்கின்றன. அவைகளைப் போற்றக் கூடாது. பாராட்டக் கூடாது. அவைகளை இகழ்ந்து ஒதுக்க வேண்டும்.

சில புராணக் கதைகளி ல் ஏராளமாக பொய்கள் இருக்கின்றன. அந்தப் பொய்களை நம்ப வேண்டாம். அவைகளில் உள்ள மொழியின் சுவை, இனிய நடை கருதி அவைகளைப் படிக்கலாம் என்று பாரதி கூறுகிறார்.

பொய்யான சில தத்துவங்களையும் பொய்யான பல கடவுள்களையும் உண்டாக்கி நம்மை மிரள வைக்கிறார்கள். மக்களிடம் மூட நம்பிக்கைகளை உண்டாக்குகிறார்கள். அவைகளை எல்லாம் இகழ்ச்சியாகக் கருதி ஒதுக்க வேண்டும்.

சில பத்திரிகைகளில் சில பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட பல செய்திகள் சில நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அவைகளை நாம் பகுத்துப் பார்த்து அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

சில அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளையும் வாய்ச்சவடால் சொல்லாடல்களையும் அள்ளி வீசி விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். அவற்றையெல்லாம் நன்கு அடையாளம் கண்டு இகழ்ந்து ஒதுக்க வேண்டும்.

74. போர்த்தொழில் பழகு

நமது நாட்டிலுள்ள ஆணும் பெண்ணும் குழந்தைப் பருவத்திலிருந்தே உடற்பயிற்சி செய்ய வேண்டும், குஸ்தி