பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 183

நமது உடலில் அத்தகைய வலிமையை உறுதியை திடத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமது வீரியத்தைப் பெருக்கிக் கொள்ள நமக்கு நல்ல உடற் பயிற்சியும் உள்ளப் பயிற்சியும் வேண்டும். அதை நாம் தொடர்ச்சியாகக் செய்ய வேண்டும்.

எதையும் நாம் பயிற்சி மூலம் தான் சாதிக்க முடியும். அதை இளமையிலிருந்தே பழகிக் கொள்ள வேண்டும். அப்பொது தான் நம்மிடையில் அது வலுவடையும்.

வீரியம் பெருக்கு என்பதில் தனிமனித வீரியம் மட்டுமல்ல. நமது நாட்டின் வீரியத்தையும் வல்லமையையும் பெருக்க வேண்டும். உலக அளவில் நமது நாடு அத்தகைய தோற்றத்தையும் ஏற்றத்தையும் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

வீரியத்தைப் பெருக்குவதில் இப்போது எலலாம் ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடைகளிலும் தாவர இனங்களிலும் பயிரினங்களிலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு மரபியல் முறையிலும் உயிரியல் தொழில் நுட்ப முறையிலும் புதிய விரிய இனங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அதில் மேலும் அபிவிருத்தி காண வேண்டும்.

107. வெடிப்புறப் பேசு

நாம் பேசும் போது சுத்தமாகவும், தெளிவாகவும் நன்கு உச்சரித்தும் பேச வேண்டும் வெடிப்பாகப் பேச வேண்டும். நன்கு பேசுவதற்கு நன்றாகக் குரல் அமைய வேண்டும், அதற்கு இளமையிலிருந்தே நல்ல பயிற்சி எடுத்தால் பெருமளவில் குரல் நன்றாக அமையும்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்று பாரதி கூறுகிறார். நாம் நமது உள்ளத்தில் உறுதி கொண்டிருக்க வேண்டும். எந்த விதமான அச்சமும் தயக்கமும் இருக்கக் கூடாது. நாம் பேசும் போது பேசும்