பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O. அ.சீனிவாசன் 15

மனித வாழ்க்கைக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, கலை, இலக்கியம் ஆகியவை போலவே விளையாட்டும், உடற்பயிற்சியும் மிகவும் அவசியமானதாகும்.

எனவே உடலினை உறுதி செய்வதில் நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதற்காக இளமையிலிருந்தே நமது ஆண், பெண் குழந்தைகளை உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் உழைப்பிலும் ஈடுபடுத்தி உடலினை உறுதி செய்ய வேண்டும், உடலினை உறுதி செய்ய நல்ல ஆரோக்கியமான உணவு வேண்டும். உடல் நலத்தையும் சீராகப் பேண வேண்டும். நாட்டின் சுகாதாரத்தையும் சுற்றுச் இழலையும் பாதுகாக்க வேண்டும். நல்ல காற்று, தண்ணிரும் கிடைக்கச் செய்ய வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். உடற்பயிற்சியில் நாமும், நாடும் கவனம் செலுத்த வேண்டும்.

0. வாண் மிக விரும்பு

மாண் மிக விரும்பு என்றால் அளவுக்கு மீறி சாப்பிட வேண்டும் என்று பொருளல்ல. நன்றாக நல்ல உணவாக சாப்பிட வேண்டும் என்று பொருளாகும். உடலினை உறுதி செய்ய முதலில் நன்றாக சாப்பிட வேண்டும். போதுமான அளவில் நல்ல சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும்.

நமது நாட்டு உணவு வகைகள் மிகவும் சிறந்தவைகளும், சத்துள்ள வைகளுமாகும். நமது உணவுப் பொருள்களில் பலவகை தானியங்கள், காய்கறி, கனிவகைகள், பால், முட்டை, - பின் முதலியவை அதிகம் உள்ளன. அத்துடன் உணவு நல்ல முறையில் செரிப்பதற்காக நல்ல மருத்துவ குணமுள்ள பல 'பாருள்களும் நமது உணவில் சேர்ந்திருக்கின்றன.

மிளகு, வெள்ளைப்பூண்டு, இஞ்சி, இலவங்கம், |வேப்பிலை, வெங்காயம், சீரகம் முதலியவைகள் எல்லாம்