பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)ே அ.சீனிவாசன் 73

மக்கள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடுகள், நாய், கழுதை, குதிரை, ஒட்டகம், பன்றி முதலிய வீட்டு விலங்குளையும் கோழி, வாத்து, புறா முதலிய வீட்டுப் பறவைகளையும் வளர்க்கிறோம். அவை நமக்குச் சில அடையாளங்களைத் தெரிவிக்கின்றன. நாம் அவைகளின் பொருளுணர்ந்து அவைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

அவைகளும் தங்கள் சைகைகளால் நமக்கு உதவி செய்கின்றன. கோழி (சேவல்) காலையில் கூவி நம்மை காலை வேலைகளுக்கு எழுப்பி விடுகிறது. நாய் குரைத் து நண்பர்களையும் பகைவர்களையும் அன்னியர்களையும் திருடர்களையும் அடையாளம் காட்டி விடுகிறது.

ஆடு, மாடுகள் தங்கள் சைகைக் குரலைக் காட்டும் போது உணவு அளிக்க வேண்டும் தண்ணிர் காட்ட வேண்டும் கறவை மாடுகளுக்குக் கன்றுகளை அவிழ்த்து விட வேண்டும், கன்றுகளைப் பால் குடிக்க விட வேண்டும்.

மக்கள் தங்கள் கலை உணர்வுகள் மூலம் பல

உண்மைகளைத் தெரிவிக்கிறார்கள். நாடகம் சினிமா, நாட்டியம், பாட்டுகள், இசை, சித்திரம், சிற்பம் முதலியவை மூலம் கிடைக்கும், மற்றும் வெளியிடப்படும் சாயல்கள் சைகைகளின் மூலம் பல பொருள்களை உணர்த்துகிறார்கள். அந்தக் கலைகள் மூலம் கிடைக்கும் மற்றும் வெளியிடப்படும் சாயல்கள் சைகைகளின் பொருள்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்து பயிற்சி பெற வேண்டும்.

நாம் மாட்டு வண்டிகள் குதிரை வண்டிகளைப் பயன்படுத்தும் போது சில சைகைகள் சம்பவங்கள் மூலம் மாடுகளும் குதிரைகளும் செயல்படுகின்றன. நாய்கள் செயல்படுகின்றன. அந்த செயல்களையும் அதன் பயன்களையும் நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

-

பஸ், லாரி, ரயில், கப்பல், விமானம் முதலியவைகளை புறப்பட வைக்கவும் நிறுத்தவும் திசை காட்டவும் நாம் சில