பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருக்கும் வயல்களெல்லாம் சுமார் 30 பெரிய மிராசுதார் களுக்கும் பல சில்லரை நிலஸ்வான்களுக்கும் உரியன. இந்த நிலஸ்வான்கள் எல்லாரும் சேர்ந்த ஒரு ஸ்பை சமைக்கப் படவேண்டும். இந்த ஸ்பையார் கோயில் வாயிலிலே கூட்டம் கூடியிருந்து கொண்டு ஊர் ஜனங்கள் அத்தனை பேரையும் பறை சாற்றுவித்துத் தம்முன்னே வரவழைக்க வேண்டும். அப்போது நிலஸ்வான்கள் எல்லா ருடைய ஸம்மதப்படி, அவர்களின் பிரதிநிதியாகிய ஒருவர் எழுந்து நின்று கிராமத்தாரிடம் பின்வருமாறு பிரமாணம் செய்து கொடுக்க வேண்டும். எப்படி என்ருல்: "கஞ்சியாவது கிடைத்து வருகிறதெனினும் அது நியதமாக எப்போதும் கிடைத்துவரும் என்ற நிச்சயம் இல்லாதபடியால் நீங்கள் எண்ணில்லாத மனக் கவலை களுக்கும், மனஸ்தாபங்களுக்கும், பொருமைகளுக்கும், வஞ்சனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும், கலகங்களுக்கும் இரையாகி மடிகிறீர்கள். "அன்ன விசாரம் அதுவே விசாரம்” என்று பட்டினத்துப் பிள்ளை சொல்லியதுபோல் உங்களுக்கு இந்த ஆகார விசாரம் தீராத பெரு விசாரமாக வந்து மூண்டிருக்கிறது. நியாயமான உழைப்பாலோ, அல்லது ப்ருதோம் என்ற பிரான்ஸ் தேசத்து சாஸ்திரி, 'உடைமையாவது களவு என்று சொல்லியபடி வஞ்சனைத் தொழில்களாலே, இந்த ஊரிலுள்ள வயல்கள் தோட்டங் கள் எல்லாவற்றையும் எங்கள் சிலருக்கு மாத்திரம் உரிமை யாகும்படி ஏற்பாடு செய்துவிட்டார்கள். பூஸ் திதி எங்க ளிடம் இருப்பது எங்களுடைய குற்றமாக மாட்டாது. எனினும், உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் ஸ்நேஹ மும் இல்லாவிட்டால் எங்களுக்கு இந்த நிலங்கள் எவ்வித மான பயனும் தரமாட்டா. மேலும் நீங்கள் அத்தனை