பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அதனைத் தெரிவிப்பாய்' என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர் "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற குறளால் உணர்த்துகிரு.ர். இதன் பொருள் 'வாயில்ை ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனல், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்" என்பது. திருஷ்டாந்தமாக, ஆண்களும் பெண்களும் ஸமான மான ஆத்ம இயல்பும், ஆத்ம குணங்களும் உடையோராத லால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகத் கருது தல் பிழை என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளி களுக்குள்ளே மிகவும் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்றுகேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ங்ணம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிருர்கள். 'விஷ்ணுபக்தி யுடையோர் எந்த குலத்தோர்ஆயினும் எல்லா வகையிலும் சமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது பூரீ ராமானுஜாசார்யருடைய பரம சித்தாந்தம்” என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டி லும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை-தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்ருர்கள். "எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனக இருக் இறேன் என்று கண்ணன் கீதையால் உணர்த்திய