பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று. கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்முய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந் தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ங்ணம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப் போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங் களும் அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப் போய்விட்டது. வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பி மார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல் வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனல் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற் படுகிறது. வாருங்கள், உலகத்திரே கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம். ஆண் பெண் சமத்வமே தர்மமென்று தெரிகிறதா, அப்படியானல் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக. சமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.