பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வளைக்கலாமென்பான். மற்ருெருவன் மணலைக் கயிருகத் திரிக்கலா மென்பான். ஒருவன் 'நாம் இ ந் த ரேட்டில்-இந்த விதமாகவே-வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத் தில் காற்ருய்ப் போய்விடும்' என்பான். மற்ருெருவன் 'சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிருர், ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்று கிறது என்பான். தவளேயுருவங் கொண்ட மூன்ருமொரு வன் ஆறு மாதமென்று சொல்லடா” என்று திருத்திக் கொடுப்பான். ,ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர் ..... ، ، ، ، ه هم « . . ه « هلسf அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண்டிருப்பார். ஆனல் ஒரு தேவதை அவரிடம் வந்து, உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளே ஸ்டுர்யோதத்திற்கு முன்பு சம்பாதித்துக் கொடுக்கிறேன். நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக் கொண்டுவா’ என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார். 'தேவதையே உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்தியை நம: ஒம் பராயை நம: இத்யாதி, அம்பிகே, இந்த உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிருேம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும், ஆனல், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள் கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக் காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் போகிற மீட்டிங்'கில் பேசித் தீர்