பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 மானம் செய்கிருேம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்' என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார், ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழி யாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸார மில்லை, ஸ்த்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழ லாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்ருன். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப் படி விட்டு விட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிருன், ஆனால், 'நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்பு வதற்கிடமில்லையே' என்று நினைக்கிருன். பிறரை நம்புவ தற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிருன். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னேக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்ரு நினைக்கிருய்? மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாருத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். இப் பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம்; அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்; ருசிஸஹிதமான விருப்பமுடையோர் கந்தவர் கள். ஸத்திய லோகக் கருவி. இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்தி லிருந்து எடுத்துக் காட்டவேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனல், பயனற்ற இவ்வுலகத்தைப் பற்றி அதிகமாக விஸ்தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகின்றேன். -ஞானரதம் என்ற நூலிலிருந்து