பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சூழத் தொடங்கிய காலத்திலே இவர்கள் தாம் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்த ஞானக்குவைகளை அதிகரிக்க முயற்சி பண்ணுமலும். தானும் அனுபவிக்காம லும், அன்னியர்கள் உபயோகிக்கவும் அனுமதி தராமலும் புதையல் காத்த பேய்கள்போலாகி விட்டார்கள். 拿 拿 冰 சென்ற சில வருஷங்களாக இந்தியாவிலே ஓர் புதிய எழுச்சி தோன்றியதற்கு முன்னடையாளமாக சுவாமி விவேகானந்தரும் அவரது கூட்டத்தாரும் தோன்றி உலக முழுதிற்கும் ஹிந்துமத உண்மைகளைப்பட்டினத்தார் தமது பணத்தைச் சூறை கொடுத்ததுபோல வாரியிறைக்கத் தொடங்கினர்கள். லெளகீக இன்பங்களிலும் நாஸ்திகக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடந்த அமெரிக்காவிலே போய் தமது 'ஸர்வத் தியாக கோட்பாடுகளையும் எல்லா வஸ்துக்களின் ஏகத்துவத்தையும், விவேகானந்த சுவாமி ராஜமேகம் போல் நின்று வருவிக்கத் தொடங்கினர். அவருக்கப்பாலும், சுவாமி அபேதானந்தர், திரிகுணதீதர் முதலானவர்கள் இவரது பெரும் தொழிலை முறையே நடத்திவருகிருர்கள். இப்போது ஜப்பானிலே மத மாறுபாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. பழைய கன்பூவிய மதம், சிதைவுபட்ட புத்தமார்க்கம் என்பனவற்றைக் கைவிட்டு வருகிருர்கள். இவர்களில் சிலர் கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்ருர் கள். 来源 米 米 அவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல் வார்களானல் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண