பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஐரோப்பியன் வந்தால் அவனுக்கு வேட்டகத்திற்கு வந்த மாப்பிள்ளைக்கு நடக்கும் உபசாரங்களெல்லாம் குறை வின்றி நடக்கின்றன. அவன் திரும்பின இடத்திலேயெல் லாம் உத்தியோகம். அவன் கால் வைத்த இடம் எல்லாம் பணம். சென்ற இடமெல்லாம் மதிப்பு. கையிலே அரைக் காசு இல்லாமல் இங்கே வந்து சேர்கிருன். திரும்ப ஊருக்குப் போகும் போது பிரபுவாகப் போகிருன். அவனுடைய தசை அப்படியிருக்கிறது. இது நிற்க, ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட திரான்ஸ்வால், கேப் காலனி, ஆஸ்டிரேலியா முதலிய தேசங்களில் இவன் (இந்தியன்) கதி மஹா பரிதாபகரமாய் விடுகிறது. இவர் வர்த்தகம் செய்து செழிப்படையவிடுகிறதில்லை. உத்தியோ கங்களென்று. மூச்சுவிடக்கூடாது. 'அங்கே நடக்கக்கூடாது இங்கே வீடு கட்டக்கூடாது, தண்ணிர் சாப்பிடத் தீர்வை கொடுக்கவேண்டும், மூச்சுவிட வரி செலுத்த வேண்டும்' என்பதாக எண்ணிறந்த இடைஞ்சல்களுக்கு உட்படுத்தப் படுகிரு.ர்கள். நமது 'காருண்ய கவர்ன்மெண்டாரிடம் முறையிட்டுத்தொண்டை வற்றிப்போய்விட்டதேயொழிய ஒரு காசுக்குப் பயன் கிடையாது. சிறிது காலத்திற்கு முன்பு திரான்ஸ்வாலில் ஏஷ்யாக்காரர்விதி' (Asiatic Ordinance) என்பதாக ஒரு விதியேற்படுத்தப்பட்டது. இது இந்தியர் களுக்கு வெகு அவமானமான விதி. இதை மாற்றவேண்டு மென்ற திரான்ஸ்வாலின் இந்தியர்கள் பிரதிநிதிக் கூட்ட மொன்று இங்கிலந்துக்குச்சென்று அங்குள்ள மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் பிரார்த்தனை புரிந்தது. எத்தனையோ பிரயாசைக்கப்பால் இங்கிலாந்து கவர்ன்மெண்டார் டிெ விதி கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைக்கப்படுமென்றும், முற்றிலும் மாற்றிவிடவேண்டுமானல் அது மிக வு ம் யோசனை செய்து முடியவேண்டிய காரியமென்றும் சொல்லி இருக்கிருர்கள். இது என்ன அவமானம்! என்ன நிந்தை!