பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 நாடுகளுக்குள்ள உரிமை கிடைக்கக் கூடாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுவது எனக்கு ஒரு பக்கத்தில் வருத்தத்தையும் மற்ருெரு பக்கத்தில் நகைப்பையும் விளை விக்கிறது. விரைவில் ஐர்லாந்தின் விஷயத்துக்கு ஒரு முடி வேற்பட வழியில்லாமலிருப்பது பற்றி வருத்தமும், இப் படிப்பட்ட மந்திரிகள் வசம் இங்கிலாந்து அகப்பட்டுக் கொண்டு தாழ்வடைகிறதென்று வருத்தமும், மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் உலக முடிவுரை ஐர்லாந்தை அடிமைப் படுத்தி ஆள முடியுமென்று நம்புவதை எண்ணுமிடத்தே பெரு நகைப்பும் தோன்றுகின்றன. இரும்புருளையா, நம் இஷ்டமான வரை நமது காலடியிலே போட்டிருப்பதற்கு! மனிதர் கூட்டமன்ருே? உலகமெங்கும் ஸ்மத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தி ஓங்கிக்கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்ருெரு பிரமாண்டமான லக்ஷக்கணக் கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப் படும்? குடியேற்ற நாடுகளைப் போன்ற ஸ்தானம் ஐர்லாந்துக் குக் கொடுத்தால் உடனே மிகவும் எளிதாக, ஆறு லக்ஷத் துக்குக் மேல் ஏழு லக்ஷம் வரை கட்டாய ராணுவ ஸேவகம் விதித்து ஐர்லாந்தியர் பெரிய ஸேனை அமைத்துக் கொள் வார்களென்றும், அதி னின்றும் இங்கிலாந்திலும் காட்டாய ராணுவ லேவகம் விதிக்க நேருமென்பதைத் தொழிற் ககதியார் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எச்சரித்தார். இதில், மிகவும் ரஸமான உபகதை யொன்று கிளைக்கிறது. அதாவது, கட்டாய ஸேவகம் வருமென்று பயமுறுத்துவதில் மிஸ்டர் லாயட் ஜ்யார்ஜ் தொழிற்ககதியாரிடையே மட்டும் பெயர் குறிப் பிட்டுப் பேசியதன் நியாயமென்ன? ஐர்லாந்துக்கு விடுதலை வேண்டுமென்பதில் அனுதாப முடையோர்