பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I47 நாகரிகத்தின் ஊற்றை நோக்கி நீஞ்சி வந்தவகை என்னை மதிக்கிறேன்" என்ருர். இவர் யார்? ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரியாக இருந்து அதி ஸமீப காலத்தில் விலகியவர். வெறும் இலக்கியப் படிப்புமட்டும் உடையவரல்லர். மிகவும் பழுத்த லெளகிகத் தேர்ச்சியும், ஐரோப்பிய ராஜ்தந்த்ரத் தில் மஹாகீர்த்தி வாய்ந்த நிபுணத் தன்மையு முடையவர். இவரே பத்து வருஷங்களுக்கு முந்தி இவ்விதமாகப் பேசி யிருக்கமாட்டார். இரண்டு வருஷங்களுக்கு முன் இப்படிப் பேசியிருக்க மர்ட்டார் நினைத்துக்கூட இருக்கமாட்டார். ஐரோப்பிய நாகரிகமே மேம்பட்டதென்று நினைத்திருப் பார். இன்றைக்கு இந்தியாவை வந்து கூடியவரை நிஷ்பrபாதமான, தெளிந்த விழிகளுடன் பார்க்கும் போது, இந்த எண்ணம் இவர்மீது வற்புறுத்தப்படுகிறது. இவருடைய வசனத்தை நன்முக ஊன்றிப் படிக்கும்படி நம்மவர்களை வேண்டுகிறேன். இவர் என்ன சொல்லு கிருர்? ஐரோப்பிய நாகரிகத்தின் பரம லக்ஷயங்கள் அவர் கள் எதிர்காலத்தில் நிறைவேற்றக் கருதும் தர்மங்கள், ஐரோப்பாவுக்கு சொந்தமல்ல வென்றும் அவை கீழ்த்திசை யிலிருந்தே கிடைத்தன வென்றும் சொல்லுகிரு.ர். நாமே ஐரோப்பாவுக்கு லக்ஷய தானம் செய்தோமென்றும் நம் முதவியின்றி அவர்கள் இன்னும் பச்சை குத்திய நிர்வாண மான காட்டு ஜனங்களாகவே யிருந்திருப்பார்களென்றும் அங்கீகரித்துக் கொள்ளுகிருர். ஆசியாவிலிருந்து நாகரிகம் ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆசியாவின் நாகரிகத்துக்கு மூல ஸ்தானம் நமது பாரத வர்ஷம். ஆனல் முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையிலில்லாதிருப்போமால்ை நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும்