பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கிரேக்க தேசத்தின் ஸ்திதி 19 நவம்பர் 1920 கிரேக்க தேசத்து ஜனங்கள் சமீபத்தில் நடந்த 'எலெக்ஷன்'களில் வாக்குக் கொடுத்திருக்கும் மாதிரியைப் பார்க்கையிலே அவர்கள் முன்னிருந்த கான்ஸ்டன்டைன் ராஜாவே திரும்பப் பட்டத்துக்கு வரவேண்டுமென்று விரும்புகிருர்களென்பது நிச்சயமாகத் தெரிகிறது. இந்தக் கான்ஸ்டன்டைன் ராஜா கெய்ஸர் சக்ரவர்த்தியின் ஸ்ஹோதரிக்குக் கணவரென்பதையும், யுத்த காலத்தில் கெய்ஸருக்கனுகூலமாக இருந்தா ரென்பதையும் கருதி, முன்னர் அவரை ராஜ பதவியினின்றும் தள்ளியவர்களாகிய இங்கிலாந்து முதலிய நேசக் ககதியார் அவர் மீளவும் கிரேக்க தேசத்து ராஜாவாகக் கூடாதென்று தீர்மானித் திருக்கிருர்கள். கான்ஸ்டன்டைனுக்கப்பால் நேசக் ககதி யாரின் கைப்பொம்மையாகிய வெனிஜிலாஸ் என்ற கிரேக்க மந்திரியின் உதவியுடனே, கிரேக்க ஆட்சியைத் தங்களிஷ் டப்படி மாற்றிக் கான்ஸ்டன்டைனுடைய இளைய மகனெரு வனைப் பட்டத்தில் வைத்திருந்தார்கள். இந்தப்பிள்ளை ஸ்மீபத்தில் குரங்கு கடித்ததனால் இறந்து போய்விட்டார். எனவே கிரேக்க தேசம் இப்போது ராஜா இல்லாமல் இருக் கிறது. கான்ஸ்டன்டைன் அரசரின் மற்ருெரு குமாரரைப் பட்டத்துக்கிருக்கச் சொல்லியதில் தமது பிதாவே ராஜா ஆகவேண்டுமென்று கருதி அவர் ராஜ பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கிரேக்க ஜனங்கள் கான்ஸ்டன் டைன் ராஜாவையே மறுபடி ஸிம்ஹாஸனத்துக்கழைக் கிருர்கள். எலெக்ஷனில் வெற்றி பெற்ற கrக்குத் தலைவராகிய பூரீமான் குநாரிஸ் என்பவர் கான்ஸ்டன் டைன் ராஜாவுக்கே மறுபடி பட்டங் கொடுக்க வேண்டு