பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் கவிதைகள் 1. காணி கிலம் காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு துரணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்தினிடையே-ஒர் மாளிகை கட்டித் தரவேண்டும்; அங்கு கேணியருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும், பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்பு வரவேணும்:-அங்கு, கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற் படவேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்ருயிளந் தென்றல்வர வேணும். பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேனும்:-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைக்ள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே.-அம்மா! நின்றன் காவலுற வேணும்;-என்றன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும். Lurr. 42-.-2