பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛犯 நாள் நிற்கிறதுமான லாபமொன்றை இவள் விரும்ப மாட்டாளென்பது தெரியும். 'இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப்படுகின்றன. "முதலாவது, (ஐரோப்பியரைப்போல நாமும்) படிப்பின் பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளை யும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத் தொழில், வியாபார சம்பந்தமான பலவித முயற்சிகளாலும் பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக்கடமையின் முக்கியாம் சங்கள். இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும். வாழ்க்கையிலே ஐயமும் அவனவன் தன் தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப்பாடுபட்டால், அதிலிருந்தே மேற்கூறிய லெளகிக தர்மத்திற்கு தூண்டுதல் உண்டாகும். இரண்டாவது, ஆத்ம தர்மம். rணமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள் நமது நாட்டில் எக் காலத்திலும் மாருமல் இருந்து வருகிருர்கள்.” ஆத்ம தர்மமாவது யாதென்ருல், பூரீ வஸ் சொல்லு கிருர்:- 'மனுஷ்ய ஜாதியின் பரம rேமத்திற்காக ஒருவன் தன்னைத் துறந்து விடுதல்' என்று. வந்தே மாதரம். இந்தத் தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடா மல் ஒரு சிலரேனும் ஆதரவு செய்து வந்தமையாலேதான் -அஸ்ஸிரியா தேசத்திலும் நீல நதிக்கரையிலும் தலை தூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்து போயின-நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிருேம். கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாருமல், தான் அவற்றைக் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்கு இருக்கிறது.