பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செய்யப் போன இடத்தில் நமக்குத் தீமையுண்டாகிறதே! கிணறு வெட்டப்போன இடத்தில் பூதம் புறப்படுகிறதே! உலகத்தைக் கிளியென்று நினைத்து அதன் பசி திரப் பால் வார்க்கும்படி போனல் அது கழுகாக மாறி நம்மைக் கொத்துகிறதே!" என்று திகைத்துப் போய் மனிதன் லோகோபகாரத்தைக் கைவிடக் கருதல் ஸாமான்யம். இது தவறு. தெய்வம் நமக்குத் தகுதியேறும் பொருட்டாக நம்மைச் சோதனை செய்கிறது. உள்ளம் பதருதிருந்தால் விரைவிலே வானந் தெளியும். லோகோபகாரம் எப்போது, எந்த வயதில் தொடங் கலாம்? இப்போது, இந்த நிமிஷத்திலே தொடங்க வேண்டும். யார் தொடங்கலாம்? ஆண், பெண், அலி, வலியவன், எளியவன், கிழவன், குழந்தை, குருடன், நொண்டி எல்லோரும் தொடங்கவேண்டும். பிறருக்கு இனியது செய்தலாவது யாது? நோய் தீர்த் தல், உணவு கொடுத்தல், அறிவு கொளுத்துதல் முதலிய செய்கை. பிறரென்ருல் அதற்கெல்லையுண்டா? சக்திக்குத் தக்க படி எல்லை. குடும்பத்தைக் காத்த பிறகு நாட்டைக் காக்க வேணும். பிறகு மனித ஜாதி முழுதையும் காக்க வேணும். லோகோபகாரத்தினல் மனிதன் என்ன பயனடை வான்? எப்போது? லோகோபகாரத்தையே பரிபூரணமாகச் செய்வோன் மனிதநிலை கடந்து அமரநிலை பெறுவான். இவ்வுலகத்தில் இந்தப் பிறவியில் பயன் அடைவான். செய்கையின் வேகத் துக்குத் தக்கபடி பயனின் வேகம். சக்தி காக்கும்-பாரதி தமிழ்.